Saturday, March 23, 2013

ABSINTHIUM – அபிஸிந்தியம்

ஐரோப்பாவில் விளையக்கூடிய விஷ செடியின் கொழுந்து இலையும், மலரும் சேர்ந்து அரைத்த சாறு.
File:Artemisia absinthium 0002.JPG  
காக்கை வலிப்புக்கு முக்கிய மருந்து. நினைப்பு தெரிந்தால் CAUST., நினைவு தெரியலை என்றால் ABSI., வலிப்புக்கு முன் கொலை வெறி BELL, CUPR, CICUTA. இது மூன்றும் வேலை செய்யாத போது ABSI. மெனோபாஸ் சீக்கிரம் வந்திடும். கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID-FL.,குழந்தை மீது வெறுப்பு ABSI.,குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C., காரணமே இல்லாமல் மனைவி மீது வெறுப்பு ANAC, ABROT, ABSI., மூன்றுமே பொருந்தும். உயரமாக தலையை தூக்கி பிடித்து தணிந்தால் N-M., அதிகமானால் ABSI.இரக்கமின்றி கொலை செய்வான். ஒழுக்கம் குறைவு. பெரியவர்களையும் பெயர் சொல்லி கூப்பிடுவான். காரணமின்றி வெறுப்பு. அம்மா மீது வெறுப்பு THUJA. காய்ச்சலில் மயங்கி பின் பக்கம் சாய்வார். தலை கீழே சாய்ந்து பிடித்தால் தணிவு. தலையணை வைத்தால் அதிகமாகும். வலிப்புக்கு முன் நடுக்கம். பயங்கரமான ஷேஷ்டை செய்தல், முட்டாள் மாதிரி;, பயங்கரமாக பார்த்தல், மாயமாக காதில் ஏதோ ஓசை கேட்டல், மாயமாக ஏதோ தெரிதல், பிறகு எதுவும் இல்லை என்று கூறுவார். டக்குனு ஞாபகம் போய்விடும். தலை:- பெண் கூறுவாள், தலையே மேல் புறமாக ஏறி முதுகு பக்கம் போகிற மாதிரி ஒரு குழப்பம் என்பாள். மூளை, தண்டுவடம், ஆகியவற்றில் ஒரு வேக்காடு. கண்:- விழி கணமாகி நமச்சல் ஏற்படும். பார்வை நரம்புகளில் ஊசியில் குத்துவது போல வலி. காது:- ஒலி நரம்புகளில் மந்தம். முகம்:- வலிப்பின் போது முகம் பனிமுட்டம் மாதிரி அதிக இரத்தம் முகத்தில் பாய்ந்தது போல சிவந்து இருக்கும். இது காக்கை வலிப்பின் போது தோன்றும் முக்கிய குறியாகும். வாய்:- காக்கை வலிப்பின் போது தாடை விரைப்பாக (இருக்கி பிடித்தது போல) இருக்கும். அப்போது நாக்கை கடித்து கொள்வார். நாக்கு தடித்து விடும். நாக்கு வெளியே பிதுங்கி பேசவே முடியாது. நாம் பார்த்தால் தொண்டை கொதி நீரில் வெந்தது போல இருக்கும். வயிறு:- பசியே இருக்காது, உணவு மீது விருப்பம் இல்லாமல் போய் விடும். சிறிது சாப்பிட்டாலும், வயிறு உப்பி, குளிர்ந்து, தொங்கி நீண்டு விடும். ஏப்பமும், குமட்டலும் மற்றும் வாந்தியும் ஏற்படும்;. கல்லீரல் பகுதியை தொட்டு காட்டி ஏதோ உறுத்துவது போலவும், ஏதோ இருப்பது போலவும் கூறுவார். அடிவயிறு:- கல்லீரல் பெருத்து விட்டது என்பார். மண்ணீரலில் வலி, மலேரியாவுக்கு பிறகு தான் இந்த தொல்லை என்று கூறுவார்கள். வயிறு உப்பிசம் ஏற்பட்டு காற்று பிரியவில்லை என்பார்கள். சிறுநீரகம்:- சிறுநீர் குதிரை மூத்திரம் மாதிரி கொழ, கொழன்னும் கடுமையான நாற்றத்துடன், அதிக நேரம் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார். பெண்உறுப்பு:- வலது சின்னைப்பையில் வலி. மந்தமான நிறத்தில் மாதவிலக்கும், காலத்துக்கு முன்னதாகவே போக்கும் ஏற்படும். மெனோபாஸ் சீக்கிரம் வந்து விடும். நுரையீரல்:- ஈரல் பற்றிய புகார்களையே கூறுவார்கள். உடன் இரும்பல். இதயம் சம்பந்தமான தொல்லைகளும் இருக்கும். பொதுக்குறிகள்:- பாதம் சில்லிட்டு விடும். காக்கை வலிப்பில் விழுந்தே கிடப்பார். நினைவே சிறிதும் இருக்காது. பல்லை அரைத்தல், வலிப்பில் குதிரையாட்டம் காலை உதைப்பார். பக்கவாதம் மாதிரி இழுக்கும்.

No comments:

Post a Comment