Saturday, March 23, 2013

ஹோமியோபதி - 1 முன்னுரை

Dr.S. மாதவன் R.H.M.P.

சேலம்

அன்புடையீர், வணக்கம். 
  • ஒரு செயலை செய்யும் முன்பு ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்ற சிந்தனையை தூண்டியவர் சாக்ரட்டிஸ்.
  • ஆசையே அழிவுக்கு காரணம் என்கிறார் புத்தர்.
  • யூதர்கள் குலத்திலேயே தோன்றி புரட்சி செய்து புதிய மதம் அன்பு, இரக்கம் என்று கிருத்துவத்தை படைத்த இயேசு.
  • சண்டை போட்டுக் கொண்டிருந்த விரோதிகளை, சகோதரர்களாக மாற்றினார்கள் நபிகள் (இஸ்லாம்).
  • பசியையும் பிணியையும் நீக்கினால் தான் மனிதனின் உயர்ந்த பண்பு என்றார் வள்ளலார்.
  • உலகத்தில் ஒரே மதம் வேண்டும், ஒரே சாதி வேண்டும், ஒரே ஆட்சி வேண்டும், ஒரே கடவுள் வேண்டும், ஒரே மாதிரியான சம நேர்நீதி வேண்டும், அதற்கு மனதை வளப்படுத்துங்கள் என்றார் வேதாத்திரி மகரிஷி.
இப்படி நம் நாட்டில் வாழ்ந்த ஞானிகள், யோகிகள் வாழ்ந்த பூமி இது, மற்றும் பெரியார், காந்தியார், காமராஜர், அண்ணா, லெனின், கார்பச்சேவ், அப்துல்கலாம் போன்ற சமுதாய தொண்டர்கள் வாழ்ந்த நாடு இது. மேலும் ஹோமியோபதி மருத்துவ மாமேதை டாக்டர். சாமுவேல் ஹானிமேன் வாழ்ந்த பூமி இது. ஆகவே நாங்கள் எட்டு நூல்களை மேலே கண்டவர்களின் உழைப்பிற்க்காகவும், நல்ல தியாகத்திற்காகவும் H.K.S.V. கல்விக் குழு உலக மக்களுக்கு இதை படைக்கிறது.

எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பளிப்பாக, அன்போடும், பணிவோடும் இதை படைக்கிறது. இதில் குற்றம் குறை இருந்தால் அறிஞர்கள் பொறுத்து எனக்கு வழிகாட்டவும். 

BY:- அன்புடன் Dr.S. மாதவன்.

குறிப்பு:-

இந்த நூலில் எட்டு நூல்கள் உள்ளன. இதை அனைத்தையும் மூன்று (அ) நான்கு தடவை படிக்க வேண்டும். முன்னுரைகளையும், பின்குறிப்பையும் கட்டாயம் படிக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒருவர் இதை படித்து தன் குடும்பத்துக்கு மட்டுமே மருந்துகளை கடையில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம். முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகிக் கொள்ளலாம். 

(1). MATERIA MEDICA-மருந்துகளை பற்றிய குணப்பாடம். 

(2). ORGANAN OF MEDICINE- நோய் என்பது என்ன, எதற்கு வைத்தியம் செய்ய வேண்டும். மருந்தை எவ்வளவு, எப்படி கொடுக்க வேண்டும் என்பது பற்றிய நூல். 

(3) CHRONIC DISEASE - - அதில் இயற்கையாக நோய் எப்படி தோன்றுகிறது என்றும், இதில் 97 நோயாளிகளின் குறிப்பு கூறப்பட்டுள்ளது. 

(4). ஹோமியோபதி மருத்துவத்துக்கு தேவையான மிக நுட்பமான உடற்கூறு சாஸ்திரத்தை இந்நூலில் விளக்கப்படும். 

(5). உறுப்புக்கு சென்று அங்கு மேலே கண்ட குறிகளை REPERTORY-ல் எவ்வாறு குறிகளாக தேர்வு செய்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. (4). ஹோமியோபதி மருத்துவத்துக்கு தேவையான மிக நுட்பமான உடற்கூறு சாஸ்திரத்தை இந்நூலில் விளக்கப்படும். 

(6). உடல் உறுப்புக்கு தொற்றிய எல்லா நோயையும், மனம் மற்றும் பொது என்ற அமைப்புக்குள் குறிகளை தேடிக் கொடுத்தாலே உறுப்புகளில் உள்ள நோய் போய் விடும் என்ற அமைப்பு இதில் தரப்பட்டுள்ளது. 

(7). உலகிலேயே மிகச்சிறந்த சுருக்கமாகவும் விளக்கமாகவும், சர்க்கரை வியாதி பற்றி கூறப்படுகிறது. 

(8). Dr. சேகல் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஹோமியோபதியை (ROH), அதில் விரைவாக நோய்களை தணிக்கும் சுருக்கமான குறி விளக்க சொல் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அந்தந்த குறிக்கு தக்க மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment